சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் கைது(Video)
சட்டவிரோத பொருட்களுடன் ஈரற்பெரியகுளம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா-ஈரட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று(03.10.2022) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, யாழ்ப்பாணத்திலிருந்து வத்தளைக்கு பயணம் செய்த லொறியை ஈரட்டை பகுதியில் வழிமறித்து பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
சட்டவிரோத பொருட்கள்
இதன்போது குறித்த வாகனத்தில் இருந்து 3800 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் 250மில்லி லீட்டர் அளவுடைய 519 விவசாய கிருமிநாசினி மருந்து போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சட்டவிரோதமான பொருட்களை கொண்டு சென்ற, நீர்கொழும்பை சேர்ந்த 43 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
