75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 75 பேர் கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவை, ஹோமாகமை, கட்டுகொட, கொஸ்கமை, மடபாத்த, பாதுக்க, பரக்கடுவ, வெல்லப்பிட்டிய, கொலன்னாவை, நுகெகொடை, கல்கிஸ்சை மற்றும் காலி ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் தொடர்பில் நடத்தப்பட்ட பரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டதுடன் அதிலேயே இந்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று பேருக்கு அதிகமான வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் திரிபு தொற்றியுள்ளதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்புவியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் பழகிய நபர்களை கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒமிக்ரோன் வைரஸ், இலங்கையில் பிரதான வைரஸ் தொற்றாக மாறியுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam