பொல்லால் தாக்கப்பட்டு முதியவர் படுகொலை
மினுவாங்கொடை - அளுதேபொல பிரதேசத்தில் முதியவர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28.09.2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ் விசாரணை
படுகொலை செய்யப்பட்ட முதியவரின் மகள் முதல் திருமண வாழ்க்கையில் பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்தது.
இதில் தந்தை தலையிட்ட போது குறித்த நபர், பொல்லால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 74 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |