நாடு தழுவிய ரீதியில் தாதியர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில்
அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதியர்கள் இன்றைய தினம் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தாதியர் ஒன்றியத்தினால் இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இன்றைய தினம் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையில் இந்தப் போராட்டம் நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட உள்ளது.
குறிப்பாக 100 பிரதான வைத்தியசாலைகளில் கடமையாற்றி வரும் தாதியர் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக அரசாங்க தாதியர் ஒன்றியத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 1ம் மற்றும் 2ம் திகதிகளிலும் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாதியர் சேவையின் பதவி உயர்வுகள் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கி அமைச்சரவையில் யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த அமைச்சரவைப் பத்திரம் குறித்த சுற்று நிருபம் வெளியிடப்படவில்லை என தாதியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சுற்று நிருபத்தை காலம் தாழ்த்தாது வெளியிடுமாறு கோரியே இன்றைய தினம் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.