உக்ரைனுக்கு எதிராக குவிக்கப்படும் அணு ஆயுதங்கள்! புடினின் அதிரடி முடிவு
உக்ரைனுக்கு எதிராக ஜூலை முதல் வாரம் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் இன்று ஜனாதிபதி அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெலாரஸ் ஜனாதிபதியுடன் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஜூலை 7,8 ம் திகதியன்று பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவித்து வைக்கும் கிடங்குகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
அதற்கான பணிகள் ஆரம்பமாக உள்ளது .இக்கிடங்குகள் ரஷ்ய இராணுவத்தின் கண்காணிப்பில் வைக்கப்படும் என கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றிருந்த பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை மாஸ்கோ ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட பெலாரஸ் இராணுவம் பயிற்சி மேற்கொள்வது, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை சேகரித்து வைக்கும் கிடங்கை அமைப்பது போன்ற விடயங்கள் குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |