தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நகர்வுகள்: அமைச்சர் சந்திரசேகரன் வெளியிட்ட தகவல்
இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வ்வும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டிலே கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் நாட்டை கொள்ளை அடித்துத்துள்ளனர்.
ஆட்சிக்கு வரும்போது எதுவும் இன்றி வருவார்கள். ஆனால் ஆட்சி செய்த போது பெருந்தொகையான நிதிகளை கொள்ளையடித்து வெளிநாடுகளில் வீடுகளை வாங்கி சொகுசு வாழ்க்கைக்கு சென்றுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
குறிப்பாக இந்த அரசாங்கமானது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குகின்றது.
விவசாயிகளிடமிருந்து தற்போது பாரபட்சமின்றி நெல்லை கொள்வனவு செய்கின்றது. கல்வியில் புதிய மாற்றத்தை கொண்டு வருகின்றது.

இவ்வாறு பல்வேறு துறைகளிலும் அபிவிருத்திகளை நோக்கி பயணிக்கின்றது கிபுல் ஓயா திட்டம் தொடர்பில் குறிப்பிடும்போது அந்தத் திட்டமானது விவசாயத்திற்காக தண்ணீரைக் கொண்டு வருவது தான் பிரதானமான நோக்கம் அங்கு சிங்கள மக்களை குடியேற்றுவது அல்ல தமிழ் மக்களை குடி ஏற்றதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்கு 212 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கற்றல் உபகரணங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வுவும் பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.




யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி