எதிர்காலத்தில் திருட முடியாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது
எதிர்காலத்தில் திருட முடியாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரச துறையில் மீண்டும் திருட்டுகளை மேற்கொள்ள முடியாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அறிமுகம் ஊடாக மீண்டும் திருட்டுக்களை மேற்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயப்படுத்தப்படாத காரணத்தினால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களின் கோப்புக்களை தேடுவதற்கு காலம் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
அரச இயந்திரம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் ஊழல் மோசடி மிக்க அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பிரதி அமைச்சர் சதுரங்க தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



