மின்வெட்டு தொடர்பில் இன்று வெளியாகிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று(2) மூன்று மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இதேவேளை இரவு ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு இடம்பெறும்.
மேலும் (CC)பகுதிகளில் காலை 6 மணிமுதல் 8.30 மணிவரை இரண்டு மணித்தியாலம் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை MNOXYZ ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 5.30 மணிமுதல் 8.30 மணிவரை மூன்று மணித்தியாலம் மின்வெட்டு இடம்பெறும்.