சூரிய மின்படலங்கள் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: காலநிலை மாற்றத்தால் புதிய தீர்மானம்
வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்படலங்களை, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
இதன்படி, கடந்த 27ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை குறித்த 300 கிலோவோட்டிற்கும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் தேசிய மின் கட்டமைப்புடன் அதன் இணைப்பு தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
இதற்கமைய, 300மறுக்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவற்றின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை! அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு