வவுனியா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி
வடக்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்குச் சுகாதாரப் பிரிவினருக்கு ஊடாக தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு இன்று (24.06) தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இது குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் எம் ஊடாக ஏற்றப்படவில்லை. அவை நேரடியாக ஏற்றப்படுகின்றன. அவை இராணுவத்தினர் ஊடாக ஏற்றப்படுவதாக அறிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனியா ஆடைத் தொழிற்சாலையிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் நிலையில் அது குறித்து ஏதும் தெரியாது என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இராசேந்திரகுளம் ஆடைத் தொழிற்சாலையில் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவனும் இராணுவத்தினருடன் இணைந்து தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam