வட கொரிய ஜனாதிபதி மீது கடும் குற்றச்சாட்டு.. சித்திரவதைக்குள்ளான பெண் முறைப்பாடு

North Korea Kim Jong Un World
By Sajithra Jul 10, 2025 08:56 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

வட கொரியாவை விட்டு வெளியேறிய பெண் ஒருவர், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்து முறைப்பாடு அளித்துள்ளார். 

சோய் மின்-கியுங் என்ற வடகொரியாவை சேர்ந்த பெண் கடந்த 1997இல் வடக்கிலிருந்து சீனாவிற்கு தப்பிச் சென்றுள்ளார், ஆனால் 2008இல் சீன அதிகாரிகளால் அவர் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டார்.

நாடு திரும்பிய பிறகு கைது செய்யப்பட்ட அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக முறைப்பாடு அளித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை சியோலில் அவர் வழக்கைத் தாக்கல் செய்த நிலையில், ​​வட கொரியாவில் பிறந்த ஒருவர் அங்குள்ள ஆட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை என தென் கொரியாவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வட கொரிய ஜனாதிபதி மீது கடும் குற்றச்சாட்டு.. சித்திரவதைக்குள்ளான பெண் முறைப்பாடு | North Korean Defector To Sue Kim Jong Un For Abuse

தென்கொரியர்களின் இதேபோன்ற புகார்கள் மீது தென் கொரிய நீதிமன்றங்கள் கடந்த காலங்களில் வட கொரியாவுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளன, ஆனால் அத்தகைய தீர்ப்புகள் பெரும்பாலும் வடகொரியாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

தற்போது சோய் அளித்துள்ள புகாரில் கிம் ஜோங் மற்றும் வடகொரிய அதிகாரிகள் நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வழக்கை ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல தென் கொரியாவின் மனித உரிமைகள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்த மிருகத்தனமான ஆட்சியின் கீழ் இனி அப்பாவி வட கொரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு மூலக்கல்லாக இந்த சிறிய நடவடிக்கை அமைய வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன் என்று சோய் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகள் 

மேலும், வட கொரிய ஆட்சியின் சித்திரவதைக்கு ஆளானவராகவும், உயிர் பிழைத்தவராகவும், கிம் வம்சத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வைக்கும் ஆழமான மற்றும் அவசரமான பொறுப்பை நான் சுமக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

வட கொரிய ஜனாதிபதி மீது கடும் குற்றச்சாட்டு.. சித்திரவதைக்குள்ளான பெண் முறைப்பாடு | North Korean Defector To Sue Kim Jong Un For Abuse

சோய் 2012இல் மீண்டும் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்று தெற்கில் குடியேறினார். வடகொரிய அதிகாரிகளால் ஏற்பட்ட பாதிப்பின் உளவியல் அதிர்ச்சி இன்னும் இருப்பதாகவும், தான் தொடர்ந்து மருந்துகளை நம்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டில், கொரியப் போரின் போது வட கொரியாவில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு இலக்கான மூன்று தென் கொரிய ஆண்களுக்கு தலா 50 மில்லியன் வோன் ($36,000) இழப்பீடாக செலுத்த சியோல் நீதிமன்றம் வட கொரியாவுக்கு உத்தரவிட்டது.

மேலும், 2024 ஆம் ஆண்டில், ஐந்து கொரிய ஜப்பானிய நபர்களுக்கு தலா 100 மில்லியன் வோன் வழங்க வேண்டும் என வட கொரிய அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டது.

1960கள் மற்றும் 1980களில் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் ஜப்பானில் இருந்து வட கொரியாவிற்குச் சென்ற ஆயிரக்கணக்கானவர்களில் இவர்களும் அடங்குவர். ஆனால் இந்த இரு வழக்குகள் தொடர்பான தீர்ப்பையும் வடகொரியா கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.     

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US