கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு முயற்சி சாதகம் என அறிவிப்பு
கொழும்பு துறைமுக கடலில் கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் சாதகமான முடிவை தந்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு முயற்சியால் புகை அடர்த்தி குறைந்துள்ளது. அத்துடன் தீ ஒரு சிறிய பகுதிக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற இந்த கப்பல் 1,486 கொள்கலன்களில் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற அபாயகரமான ஐ.எம்.டி.ஜி குறியீடு இரசாயனங்கள் எடுத்துச் சென்றது.
இந்த நிலையில் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலின் தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை அயராது உழைத்து வருவதாக இந்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே வளர்ந்து வரும் கடல் ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையில் ஒபரேஷன் சாகர் ஆரக்ஷா 2 என்று இந்த தீயணைப்பு நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது, மூன்று இந்திய கரையோர காவல்படை கப்பல்கள் மற்றும் இலங்கையின்
நான்கு இழுபறிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.