யாழில் தமிழ்த்தேசிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - மருதலிங்கம் பிரதீபன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம்(20.03.2025) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
அந்த வகையில், 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களின் நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
