இரசாயன பசளைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை!
உள்ளூர் விவசாய நோக்கங்களுக்காக இரசாயன பசளைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
அத்துடன் உள்ளூர் விவசாயத்திற்கு இயற்கை பசளைகளை மட்டுமே பயன்படுத்த ஜனாதிபதி எடுத்த முடிவில் எந்த மாற்றமும் செய்யவில்லை, எதிர்காலத்திலும் இந்த முடிவில் எந்த மாற்றமும் செய்யபடாது என்று ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி விவசாயத்துறை அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை ஊட்டச்சத்து கனிமங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.