கடிதங்களில் கையெழுத்திட மட்டுமேயான அமைச்சு பதவி எனக்கு தேவையில்லை : சீ.பி.ரத்நாயக்க
அமைச்சரவையில் வழங்கும் கடிதங்களில் கையெழுத்திடவும் அல்லது நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவும் மாத்திரம் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி தேவையில்லை என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க (C.B.Rathnayake) தெரிவித்துள்ளார்.
பணியாற்ற முடிந்தால், பணியாற்ற வேண்டும். வேலை செய்யும் போது காலை பிடித்து இழுக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில நேரம் மக்கள் எம்மை நிராகரிக்கலாம். எமக்கு அமைச்சுக்களை கைவிட செல்ல வேண்டுமாயின் எந்த பிரச்சினைகளும் இல்லை.  எனினும் நான் நுவரெலியா மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். முழு நாட்டு மக்களுக்கும் நான் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் சீ.பி. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam