எரிபொருள் விநியோகத்தில் டோக்கன் முறை இனி இல்லை
இனி வரும் நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
வியாபாரமாக மாறியுள்ள டோக்கன் முறை
பொதுமக்கள் வரிசையில் நிற்பதில் இருந்து விடுவிப்பதற்காகவும், ஜூலை 11 அல்லது 15 ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கவும் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும் குறித்த முறை பின்னர் நடைமுறைப்படுத்தப்படாமல் வியாபாரமாக மாறியுள்ளது.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் முறையானது எரிசக்தி அமைச்சின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டோக்கன் முறை தொடர்வதை அமைச்சர் நிராகரித்த போதிலும், பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பெற வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam