மத்திய கிழக்கில் மோதல்: வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள முடிவு
கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி அதே மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்த பின் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
நாணயக் கொள்கைச் சபைக் கூட்டம்
நேற்று (24.03.2026) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒரு நாள் கொள்கை வட்டி வீதம் 7.75% என்ற மட்டத்தில் மாற்றமின்றி தொடரும்.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் சூழலால் உருவாகியுள்ள நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம்
தற்போதைய தரவுகள் மற்றும் நிலவும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற் கொள்ளும் போது, எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 5% என்ற இலக்கை அடையும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், நடுத்தர காலத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam