கிழக்கில் நல்லாட்சி காலத்தில் பாலங்கள் இல்லை, ராஜபக்சவின் காலத்திலேயே அதிக பாலங்கள்: எஸ்.வியாழேந்திரன்(Video)
நல்லாட்சியென்ற பெயரில் சொல்லாட்சி நடாத்திய காலத்தில் கிழக்கில் ஒரு பாலம் கூட அமைக்கப்படவில்லையெனவும் கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே அதிக பாலங்கள் கட்டப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தினை புனரமைப்பது குறித்து நேரில் சென்று ஆராயும் வகையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக முக்கிய பாலமாகவும் மிகவும் பழமைவாய்ந்த பாலங்களில் ஒன்றாகவும் காணப்படும் இந்த பாலமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
குறித்த பாலத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உடைவு காரணமாக ஒரு பக்க போக்குவரத்து மட்டுமே நடைபெற்றுவரும் நிலையில் குறித்த பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பாலத்தினை புனரமைக்கும் பணிகள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுத் திட்ட வரைபுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 165மீற்றர் நீளமும் 10.5அகலமும் கொண்ட குறித்த பாலத்தினை புனரமைப்பதற்காக 1000மில்லியன் ரூபா தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பாலத்தினை விரைவில் புனரமைத்து மக்களின் பாவனைக்கு வழங்கும் வகையில் இன்று இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அப்பகுதிக்கு விஜயம் செய்து அது தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் நிறைவேற்று பொறியியலாளர் ஆகியோர் இணைந்திருந்தனர்.
கடந்த நல்லாட்சிக்காலத்தில் பல பாலங்களுக்குக் கற்கள் நடப்பட்ட நிலையில் எந்த பாலத்தின் கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையென இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை
ஏற்படுத்திக்கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர்
தெரிவித்துள்ளார்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022