முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி இன்று (28) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, அவர் இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல் சம்பவம்
பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணையுடன் இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் அவர் கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜூலை 15, 2020 அன்று பதவியேற்றார்.
டிசம்பர் 18, 2022 அன்று தனது பதவிக்காலம் முடிந்ததும் அவர் இலங்கை கடற்படையின் தளபதி பதவியில் இருந்து விலகினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
