முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி வரையில் நிசாந்த உலுகேதென்னவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்பத்பட்டார்.
இதன் போது நிசாந்தவை 27ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிசாந்த, கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவமொன்று தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 28ம் திகதி கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கையின் 24ம் கடற்படைத் தளபதியாக நிசாந்த உலுகேதென்ன கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



