இலங்கை பெண்களுக்கு திருமண ஆசையை காட்டி பண மோசடி செய்த நைஜீரிய பிரஜை
போலியான அடையாளத்தை வெளிப்படுத்தி திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து இலங்கை பெண்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த நைஜீரிய பிரஜை

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நைஜீரிய பிரஜை கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சமூக வலைத்தளங்களில் தான் ஐரோப்பாவில் வசிக்கும் மருத்துவர், பொறியியலாளர் எனக் கூறி முகநூல் ஊடாக இலங்கை பெண்களுடன் அறிமுகமாகி அவர்களை திருமணம் செய்துக்கொள்ளவதாக வாக்குறுதி வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், பரிசு பொருட்களை அனுப்புவதாக கூறி, சுங்க திணைக்களத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள பணம் தேவை தெரிவித்து பெண்களை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
பணத்தை எடுக்க சென்ற போது பொலிஸாரிடம் சிக்கிய சந்தேக நபர்

இவ்வாறு ஏமாற்றப்பட்ட பெண்ணொருவர் வைப்புச் செய்த பணத்தை மகரகமையில் உள்ள பணம் மீளப்பெறும் இயந்திரத்தில்( ATM) இருந்து எடுக்க சென்றிருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினர், இப்படியான நிதி மோசடி சம்பந்தமான மேலும் சில நைஜீரிய பிரஜைகளை கைது செய்வதற்காக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan