வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் ஆபத்தான பொருள் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை முழுவதும் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 128 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 128 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பு, வத்தளைப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி 113 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 101 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஜா-எல பகுதியில் 15 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,