யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வாரில் இடம்பெறவுள்ள வருடப்பிறப்பு பூஜைகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் குரோதி வருடப் பிறப்பை முன்னிட்டு பூஜைகள் நடைபெறவுள்ளன.
பூஜை நிகழ்வானது இன்று (13.04.2024) இரவு 8.15 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் நாளை (14.04.2024) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:30 மணிக்கு சுப்ரபாதமும், 05.00 மணிக்கு உசற்கால பூசையும், 05.15 மணிக்கு அபிஷேகமும் ஆரம்பமாகவுள்ளது.
மேலும், முதலாம் கால பூஜை 06.00 மணிக்கும், வசந்தமண்டப் பூஜை 06.15 மணிக்கும் மேஷசங்கிராந்தி தீர்த்தம் 07.00 மணிக்கும் கை விசேஷம் 07.30 மணிக்கும் இடம் பெறவுள்ளதோடு பொங்கல் 08.00 மணிக்கும் நடைபெறவுள்ளது.