வடக்கு - கிழக்கில் நடைபெறும் புதிய யுத்தம்: கோவிந்தன் சூளுரை (Video)
2009இற்குப் பின்னர் வடக்கு கிழக்கிலே சிங்கள மயமாக்கல் எனும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (29.06.2023) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருவதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதி கொடுத்து நாடாளுமன்றத்தில் சட்டமூலமும் வரவுள்ளது.
இன்பிரச்சினைக்கு தீர்வு
ஆனாலும் இந்த பொருளாதாரச் சூழலுக்கு என்ன காரணம் என்பதை எமது அரசியல் தலைவர்கள் அறிந்தும் அதற்கான தீர்வைக் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலையிலேயே இன்றும் இருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கிலே சிறிய சிறிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைபெற்று வந்தாலும், வடகிழக்கில் சிங்கள மயமாக்கல் மேலோங்கியிருக்கின்றது.
கோட்டபாய ராஜபக்ச காலத்தில் அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்றவர்கள், சிங்கள மயமாக்கலுக்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.
அரசு இன பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு முயற்சியில் 50 சதவீதம், நிறைவேறியுள்ளதாக ஜனாதிபதி லண்டனில் வைத்துத் தெரிவித்தார். ஆனால், அதை எந்த விததலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது வேறு பொருளாதார ரீதியான அபிவிருத்தி என்பது வேறு.
இந்த அரசாங்கம் வந்த பின்னர் ஒரு சில நல்ல காரியங்கள் செய்திருக்கின்றன. அதனை நாம் மறந்துவிட முடியாது.
காணி விடுவிப்புக்கள் நடைபெற்றிருக்கின்றன, கூடுதலான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆயுதப் போராட்டம்
அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு இணைந்த வடகிழக்கிலே ஒரு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியும், எடுக்கப்படவில்லை.
2009ஆம் ஆண்டு வரையில் இந்த நாட்டிலே ஆயுதப் போராட்டம் நடந்தது. 2009இற்குப் பின்னர் இந்த நாட்டின் வடக்கு கிழக்கிலே சிங்கள மயமாக்கல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த யுத்தத்திற்கு ஜனாதிபதி அவர்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் அரச இயந்திரங்கள், அரச அதிகாரிகள் இராணுவத்துடன் இணைந்து அந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல்
என்னைப் பொறுத்தவரையில் மக்களுடைய முன்னேற்றம், அபிவிருத்திக்குத்தான் நான் முதலிடம் கொடுப்பேன், அதற்காக நான் அரசுடன் இணைந்து இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்றில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் 256 பேர் போட்டியிட்டு 5 பேர் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் கட்சி சார்ந்து செயற்படக் கூடாது என்பது எனது உறுதியான கொள்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan
