சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய சீனி தொழிற்சாலை: இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
வெலிஓயா பிரதேசத்தில் புதிய சீனி தொழிற்சாலை ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற(Janaka Vakumpura) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தமது அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனி விலையைக் குறைந்த அளவில் பேணி, நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கந்தளாய் சீனி தொழிற்சாலையின் பணிகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புற தெரிவித்துள்ளார்.