கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய அம்பாறையில் புதிய இடம்
கோவிட் பெருந்தொற்று காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கு புதிய இடமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறையின் இரக்காமம் பகுதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கோவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவிட் சடலங்கள் ஒட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்பய்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மயான பூமியில் இன்னும் 300 சடலங்களை மட்டுமே அடக்கம் செய்ய முடியும் எனவும் பின்னர் இடப்பிரச்சினை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முற்பகல் வரையில் ஒட்டமாவடியில் 1470 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம்களின் 1383 சடலங்களும், பௌத்தாகளின் 24 சடலங்களும், இந்துக்களின் 39 சடலங்களும், கிறித்தவர்களின் 24 சடலங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பகுதியில் சுமார் 2400 சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடம் என குறித்த பகுதியை அம்பாறை மாவட்டச் செயலாளர் அடையாளப்படுத்தியுள்ளார்.
இந்த பகுதியில் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து தொழில்நுட்ப குழுவின் ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றதும் இங்கு உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
