மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக மின்சார துண்டிப்பு அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும் பகல் வேளையில் மின் விநியோக தடையை ஏற்படாது என சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார்.
5 நாட்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பிலுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, இன்று (10) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று அறிவித்தது.
மின்வெட்டை குறைத்துக்கொள்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.