நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கி வழங்க நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக ஆயுதம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஆயுதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு ரிபீடர் ரக துப்பாக்கி வழங்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பம்
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன்,மேலதிகமாக ரிபீடர் ரக துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரிபீடர் ரக துப்பாக்கி வழங்கப்பட முடியும் என நாடாளுமன் பொதுச் செயலாளர் பாதுகாப்பு அமைச்சிடம் அறிவித்துள்ளார்.
ரிபீடர் துப்பாக்கிகளை வழங்குமாறு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள சீன உற்பத்தியான கைத்துப்பாக்கிகள் பழயவை என கூறப்படுகின்றது.
இவற்றில் சில தற்பொழுது இயங்கக்கூடிய நிலையில் இல்லை என பாதுகாப்பு அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய ரிபீடர் துப்பாக்கிகள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan