இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர்
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான புதிய ஆணையாளர் நாயகம், நிதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய டப்.ஏ.எஸ்.சந்திரசேகர, கடந்த பெப்ரவரி 28ம் திகதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இந்நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் திணைக்களத்தில் விசேட தர அதிகாரியாக கடமையாற்றிய ஆர்.பி.எச்.பெர்னாண்டோ, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam