பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
அடுத்தாண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சுற்றறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சுற்றறிக்கை
அதற்கமைய மிகவும் பொருத்தமான மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என பிரதிமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் சட்டவிரோதமான மற்றும் முறையற்ற முறைகள் மூலம் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறை முடிவுக்கு வரும் என பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.