நெல்லியடி மத்திய பேருந்து நிலைய மலசலகூடத்தின் நிலை! பொதுமக்கள் சிரமம்
யாழ்ப்பாணம் - நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசலகூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.
குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளில் தூர பிரதேசங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர்.
பராமரிப்பின்றி மலசலகூடம்
மலசலகூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் அதனை பயன்படுத்தும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே இந்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையினர், கரவெட்டி பிரதேசசபை பாராமுகமாக இருக்காது, மலசலகூடத்தினை தூய்மையாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மது அருந்துதல், போதைப்பொருள் பாவனை
இதேவேளை இரவு வேளைகளில் பேருந்து நிலையத்தில் கூடும் சிலர் அங்கே மது அருந்துதல், போதைப்பொருள் பாவனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் பேருந்து நிலையம், அதனை சூழவுள்ள பகுதிகள், மலசலகூடங்கள் போன்ற இடங்களில் அதிகளவில் மதுபான போத்தல்கள் நிறைந்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளினால் இரவு வேளைகளில் பேருந்துக்களில் வந்து பேருந்து
நிலையத்தில் இறங்கும் பெண்கள் உள்ளிட்டோர் அச்ச நிலையில் இருப்பதாகவும், இதனால் குறித்த விடயங்கள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
