ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – நிமால் சிறிபால டி சில்வா
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் முற்பகல் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு சில அநீதிகள் இழைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.