நஸீர் அஹமட்டின் உடைமைகள் தீ வைப்பு விவகாரம்: கைதாகியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் உட்பட வீட்டின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு, அவரது உறவினரின் வீடு, விடுதி, கடை என்பன தீக்கிரையாக்கியதுடன், 3 ஆடைத்தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கியுள்ளனர்.
இதனையடுத்து ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்துவரும் நூற்றுக்கணக்கானோர் நேற்று முன்தினம் ஒன்றிணைந்து ஆடை தொழிற்சாலை சேதமாக்கியவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆடை தொழிற்சாலையிலிருந்து பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை பொலிஸார் இடைமறித்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் வாக்குறுதியளித்தனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது விடுதியில் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை தீயிடப்பட்ட விடுதி மற்றும் கடை ஆகிய கட்டடங்களை வாடகைக்குப் பெற்று அதனை நடாத்தி வந்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும்
நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் ஈடுபட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 1 மணி நேரம் முன்

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் News Lankasri

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022