நாமல்- இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட கலந்துரையாடல்
இலங்கைக்கான இந்திய (India) உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (16.01.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தித்திட்டங்கள், முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் உறவு
அத்தோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற துறைகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக உயர் ஸ்தானிகர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
High Commissioner @santjha met @RajapaksaNamal, MP & @PodujanaParty National Organizer. Exchanged views on the multi-faceted 🇮🇳🇱🇰 issues, ranging from ongoing development projects, investments, economic revival of Sri Lanka and other areas of mutual interest. pic.twitter.com/PL6g3t9Qdk
— India in Sri Lanka (@IndiainSL) January 15, 2025
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவும் வலுவான உறவைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து விவாதித்ததாக நாமல் ராஜபக்ச தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
