வீட்டின் செல்லப்பிராணியையும் விசாரணைக்கு அழைத்துவர தயார்:நாமலின் நையாண்டி பேச்சு
அரசாங்கம் விசாரணைக்கு அழைக்கும் எந்நேரமும் நான் உட்பட அம்மா,அப்பா,தம்பி வருவதற்கு தயாராகவே இருக்கிறோம்.அத்தோடு வீட்டில் தங்க சங்கிலி போடப்பட்டிருக்கும் செல்லப்பிராணியையும் அழைத்து வரவும் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில், 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
எதற்கும் முகம் கொடுக்கத் தயார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் என்னால் அச்சடிக்கப்பட்ட படங்கள் மற்றும் கல்வி கருத்தரங்குகள் தொடர்பில் விசாரித்தனர்.கட்சி கூட்டங்களில் எடுத்துக் கொண்ட படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் கேட்டனர்.அதற்கான அனைத்து விபரங்களையும் தெரிவித்தேன்.
நான் கேட்ட கேள்விகள்
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.ஆனால் அரசாங்கத்திற்கு சார்பானவர்களை பாதுகாப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
மொடியுல் மோசடி மற்றும் நிலக்கரி மோசடிகளை மறைப்பதற்கு எங்களை கொண்டு வந்து ஒன்றும் நடக்கப் போவதில்லை.இதற்கு பயந்து நாங்கள் வாய் மூடி இருக்கப் போவதில்லை.

நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக குரல் எழுப்புவோம்.கொல்களன் விடுவிப்பு,நுவரெலியாவிலுள்ள ஐஸ் தொழிற்சாலை தொடர்பில் நான் கேட்ட கேள்விக்கு எவ்வித பதிலும் இல்லை.நான் இன்றும் சொல்கிறேன் எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
you may like this