வன்முறையை தூண்டும் நோக்கில் அலரி மாளிகையில் கூட்டத்தை நடத்தவில்லை

Galle Face Protest Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lankan protests Temple Trees
By Steephen May 10, 2022 06:01 AM GMT
Report

அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் அரசாங்கத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கூட்டம் எனவும் வன்முறையை தூண்டும் நோக்கில் அந்த கூட்டம் நடத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சரும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை வன்முறை பலமிக்கவர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். எனினும் வன்முறையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை நோக்கி திருப்பபட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது 4ஊடகப் பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த போன்றவர்கள் ஆதரவாளர்களை தூண்டு விடும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டம் முடிந்து வெளியில் வந்த பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபைகளின் அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு எதிரில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் அங்கிருந்த கூடாரங்களை அடித்து உடைத்து, எரித்தனர். இதன் பின்னர் காலிமுகத் திடல் நோக்கி சென்று கோட்டா கோ கமவில் உள்ள ஆதரவாளர்களை தாக்கியதுடன் கூடாரங்களையும் சேதப்படுத்தி தீயிட்டு எரித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்தும் மக்கள் ஆத்திரமடைந்து, நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக இல்லம் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் பலரது வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.

அத்துடன் போராட்டகார்கள் தம் மீது தாக்குதல் நடத்த வந்திருந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்களை தாக்கி சிறைப்பிடித்தனர். அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பேருந்துகள் மற்றும் வாகனங்களை தாக்கியழித்தனர்.

போராட்டகார்கள் மீதான் ஆளும் கட்சியினரின்  இந்த தாக்குதல் சம்பவம் நாட்டில் நேற்று பெரும் பதற்றத்தையும் வன்முறையையும் ஏற்படுத்தியதுடன் நாட்டை கலவரபூமியாக மாற்றி இருந்தது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US