வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை 9 மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் காலை 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளதுடன், மஞ்சள்திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 18ஆம் அருணகிரிநாதர் உற்சவமும், 19ஆம் கார்த்திகை உற்சவமும், 24ஆம் திகதி மாலை சப்பறத் திருவிழாவும், 25ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 26ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் இடம்பெற்று அன்றையதினம் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்