பாண் விற்கும் வாகனம் மற்றும் விற்பனையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - காட்டுப்புலத்தில் பாண் விற்பனை செய்யும் வாகனம் மீது நேற்றிரவு (22.11.2022) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மாதகல் பகுதியில் உள்ள வெதுப்பக உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திகள் சுழிபுரம் பகுதிக்கு வாகனம் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவது வழமை.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இந்நிலையில் வழமை போன்று நேற்றையதினம் பாண் விற்பனைக்கு வந்த வாகனம் மீதும் வாகன சாரதியும் விற்பனையாளருமான இளைஞன் மீதும், முகத்திற்கு கறுப்பு துணி கட்டிவந்த மர்மநபர்கள் மூவர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் (21.11.2022) மதுபோதையில் வந்த சிலர் குறித்த பாண் விற்பனையாளரிடம் கடனாக பாண் கேட்டுள்ள நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 22 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam