பாண் விற்கும் வாகனம் மற்றும் விற்பனையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - காட்டுப்புலத்தில் பாண் விற்பனை செய்யும் வாகனம் மீது நேற்றிரவு (22.11.2022) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மாதகல் பகுதியில் உள்ள வெதுப்பக உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திகள் சுழிபுரம் பகுதிக்கு வாகனம் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவது வழமை.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இந்நிலையில் வழமை போன்று நேற்றையதினம் பாண் விற்பனைக்கு வந்த வாகனம் மீதும் வாகன சாரதியும் விற்பனையாளருமான இளைஞன் மீதும், முகத்திற்கு கறுப்பு துணி கட்டிவந்த மர்மநபர்கள் மூவர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் (21.11.2022) மதுபோதையில் வந்த சிலர் குறித்த பாண் விற்பனையாளரிடம் கடனாக பாண் கேட்டுள்ள நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri