மியன்மார் நிலநடுக்கம்..! வெளியான செயற்கைகோள் புகைப்படங்கள்
மியன்மாரை (Myanmar)நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில் அவை தொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன.
மியன்மாரை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த கடந்த 28ஆம் திகதி நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
நிலநடுக்கம்
தாய்லாந்து மற்றும் அருகிலுள்ள சீன மாகாணங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது 2021 இல் இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து உலகின் பெரும்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்ட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு மேலும் ஒரு அடியைக் கொடுத்துள்ளது.
செயற்கைக்கோள் படங்கள்
கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு ஏராளமான மக்கள் பலியான பிறகு, உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் தான் நிலநடுக்கத்திற்கு முன்னர் பின்னர் என்ற செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




