சிங்களவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம்கள்
இலங்கை முழுவதும் நேற்றும் இன்றும் தன்சல் எனும் தானசாலைகள் அமைத்து மக்களுக்கு உணவுகள், பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் குழுக்களால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றையதினம் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களும் தன்சல் வழங்கி சிங்கள மக்களை நெகிழ்சி அடையச் செய்துள்ளனர்.
முஸ்லிம் மக்கள்
அனுராதபுரம் உட்பட பல பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் மக்கள் தன்சல் வழங்கியமை தொடர்பில் சிங்கள மக்கள் அதிகம் பேசப்பட்டு வருகிறன.
அரசியல்வாதிகள் இனவாத சிந்தனைகளை விதைத்தாலும் மக்கள் மத்தியில் இன நல்லிணக்கம் மேலோங்கியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.