யாழில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இடையிலான இசைப்போட்டி..!
சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
தவத்திரு. வேலன் சுவாமிகள் ஆசியுரையுடனும் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனின் வாழ்த்துரையுடனும் காலை 9 மணியளவில் ஆரம்பித்த இப்போட்டி நிகழ்ச்சி பிற்பகல் 5.30 வரை தொடர்ச்சியாக நடை பெற்றது.
இளம் தன்னார்வலர்கள்
இப்போட்டியானது வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியக் கருவி இசைத்தல் போன்ற பிரிவுகளில் இடம்பெற்றதோடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கி நிகழ்த்தப்பட்ட இசைப்போட்டி என்பது குறிப்பிடதக்கது.
மாற்றுத்திறனாகளின் இசைத் திறமையினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இப்போட்டி 20இற்கு மேற்பட்ட இளம் தன்னார்வலர்களின் அணிசேர் முயற்சியால்
ஒழங்கமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.