2009 இல் தமிழ் இனத்திற்கு நடந்த பேரவலம் - சாள்ஸ் நிர்மலநாதன்
2009 ஆண்டு முள்ளிவாய்க்காலில் எங்களுடை உரிமைப் போரின் இறுதியின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மிகக் கொடூரமாக கொள்ளப்பட்டார்கள் அதாவது, 20ஆம் நூற்றாண்டில் உலகத்தில் எந்தவொரு இனமும் சந்திக்காத பேரழிவை தமிழர்கள் சந்தித்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தழிழர்களுக்கு நீதி தேடுகின்ற ஒரு நாளாகவே நாங்கள் பார்க்கின்றோம். இருந்தாலும் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற கோவிட் தொற்றும் தமிழர்களை இந்த நிலையில் மனவேதனைக்கு ஆழ்த்தியுள்ளது.
நாளை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அனுஷ்டிப்பது அவசியமாகும். உலகில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி அதனை வெளிப்படுத்த கூடிய வகையில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தமிழர்கள் அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஷ்டிப்பதன் ஊடாக 2009 ஆண்டு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்கு நீதி கேட்பதுடன், சர்வதேச சமூகத்திடம் நீதியை எதிர்பார்க்கின்றதொரு செய்தியையும் உலகநாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அந்தவகையில் நாளை ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் உலகில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் நினைவு நாளை அனுஷ்டிக்க வேண்டும் என்றார்.