நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

Sri Lankan Tamils Ampara Mullivaikal Remembrance Day
By Independent Writer May 15, 2024 09:55 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டு கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

இறுதி யுத்தக் காலத்தில் திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் என மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கப்பெறவில்லை.

அந்த நேரத்தில், மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.

இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக படிப்பை முடித்துள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக படிப்பை முடித்துள்ளார்

அம்பாறை மாவட்டம்

அந்தவகையில், தமிழினப்படுகொலை வாரத்தின் நான்காம் நாளான இன்றையதினம் (13.05.2024) அம்பாறை (Ampara) மாவட்டம் காரைதீவு பொதுச்சந்தை முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வு பூர்மாக இடம்பெற்றது.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

குறித்த நிகழ்வானது, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.  


இதன்போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) காரைதீவு பிரதேசக் கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறி அனுஷ்டிப்பினை மேற்கொண்டிருந்தனர்.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

செய்தி - நவோஜ்

வவுனியா மாவட்டம்

முள்ளிவாய்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு வவுனியா (Vavuniya), திருநாவற்குளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் பலர் இணைந்து குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வை நடத்தியுள்ளனர்.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

செய்தி - திலீபன்

யாழ்ப்பாண மாவட்டம்

அத்துடன், யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண நகர பழக்கடைக்கு முன்னால் உள்ள வைரவர் கோவிலடியில் நடைபெற்றுள்ளது.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

இதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் தலைவி இளங்கோதை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆகியோர் கலந்துகொண்டு கஞ்சியை சமைத்து அங்குள்ளவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

செய்தி - கஜிந்தன் மற்றும் தீபன்

வட்டுக்கோட்டை 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இடம்பெற்றுள்ளது.


குறித்த கஞ்சி விநியோக நிகழ்வு, இன்று காலை 10 மணியளவில் மானிப்பாய் அமைந்துள்ள பொதுச் சந்தையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

இதன் பொழுது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.


நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

செய்தி - தீபன்

நினைவேந்தல் ஊர்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் ஊர்தி வடமராட்சியின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த ஊர்தி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி ஊடாக வடமராட்சி கிழக்கு உடுத்துறைக்குச் சென்றடைந்துள்ளது.

அத்துடன், பருத்தித்துறையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு சுடரேற்றப்பட்டு மலர் தூவி நினைவு கூறப்பட்டுள்ளது. 

செய்தி - எரிமலை

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழின அழிப்பை நினைவுகூர உணர்வுபூர்வமாக தயாராகும் தாயகம் : முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி

தமிழின அழிப்பை நினைவுகூர உணர்வுபூர்வமாக தயாராகும் தாயகம் : முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US