நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

Sri Lankan Tamils Ampara Mullivaikal Remembrance Day
By Independent Writer May 15, 2024 09:55 AM GMT
Report

தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டு கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

இறுதி யுத்தக் காலத்தில் திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் என மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கப்பெறவில்லை.

அந்த நேரத்தில், மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.

இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக படிப்பை முடித்துள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக படிப்பை முடித்துள்ளார்

அம்பாறை மாவட்டம்

அந்தவகையில், தமிழினப்படுகொலை வாரத்தின் நான்காம் நாளான இன்றையதினம் (13.05.2024) அம்பாறை (Ampara) மாவட்டம் காரைதீவு பொதுச்சந்தை முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வு பூர்மாக இடம்பெற்றது.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

குறித்த நிகழ்வானது, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.  


இதன்போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) காரைதீவு பிரதேசக் கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறி அனுஷ்டிப்பினை மேற்கொண்டிருந்தனர்.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

செய்தி - நவோஜ்

வவுனியா மாவட்டம்

முள்ளிவாய்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு வவுனியா (Vavuniya), திருநாவற்குளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் பலர் இணைந்து குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வை நடத்தியுள்ளனர்.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

செய்தி - திலீபன்

யாழ்ப்பாண மாவட்டம்

அத்துடன், யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண நகர பழக்கடைக்கு முன்னால் உள்ள வைரவர் கோவிலடியில் நடைபெற்றுள்ளது.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

இதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் தலைவி இளங்கோதை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆகியோர் கலந்துகொண்டு கஞ்சியை சமைத்து அங்குள்ளவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

செய்தி - கஜிந்தன் மற்றும் தீபன்

வட்டுக்கோட்டை 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இடம்பெற்றுள்ளது.


குறித்த கஞ்சி விநியோக நிகழ்வு, இன்று காலை 10 மணியளவில் மானிப்பாய் அமைந்துள்ள பொதுச் சந்தையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

இதன் பொழுது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.


நான்காவது நாளாக பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி | Mullivaikal Remembrance Day Four

செய்தி - தீபன்

நினைவேந்தல் ஊர்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் ஊர்தி வடமராட்சியின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த ஊர்தி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி ஊடாக வடமராட்சி கிழக்கு உடுத்துறைக்குச் சென்றடைந்துள்ளது.

அத்துடன், பருத்தித்துறையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு சுடரேற்றப்பட்டு மலர் தூவி நினைவு கூறப்பட்டுள்ளது. 

செய்தி - எரிமலை

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழின அழிப்பை நினைவுகூர உணர்வுபூர்வமாக தயாராகும் தாயகம் : முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி

தமிழின அழிப்பை நினைவுகூர உணர்வுபூர்வமாக தயாராகும் தாயகம் : முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US