அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய முல்லைத்தீவுப் பாடசாலை
அகில இலங்கை கர்நாடக சங்கீத மாகாண மட்டப் போட்டியில் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை மாணவர்கள் திரை இசைப் பாடல் போட்டியில் வெற்றியீட்டி உள்ளார்கள்.
வடமாகாண மட்டத்தில் நடைபெற்ற திரையிசைப் பாடல் போட்டியில் "வெள்ளைப் பூக்கள்" என்ற பாடலினை இசைத்து இவ்வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட மு/உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலய மாணவர் குழுவை பலரும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பங்குபற்றிய மாணவர்கள்
இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகமும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இம் மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக ஏற்பட்ட போக்குவரத்துச் செலவிற்கான நிதி உதவியை வழங்கிய பாடசாலையின் பழைய மாணவரான திரு.ம.ஐங்கரன்(மயூரன்)க்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை சார்பாக பேசியவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |