தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் அதிக பதக்கங்களை பெற்ற முல்லைத்தீவு மாவட்டம்
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கிடையில் தேசிய மல்யுத்த போட்டி கடந்த 27ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை கண்டியில் உள்ள திகன உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது.
கல்வி அமைச்சின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் வடக்கில் மல்யுத்த முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்கள் அதிகளவான பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.
ஒரு தங்கப்பதக்கம் நான்கு வெள்ளிப்பதக்கம் ஏழு வெண்கலப்பதக்கம் என மொத்தம் 12 பதக்கங்களை முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்கள் தமதாக்கியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள்
முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவர்கள் 20 வயதுப் பிரிவில் 1. சு. பவித்திரா (57கிலோ) - தங்கப் பதக்கம் 2. ர. டியாழினி (55கிலோ) - வெண்கலப் பதக்கம் 3. ம. கயாத்திரி (47கிலோ) - வெண்கலப் பதக்கம் 4. செ. அஜித்தா (50கிலோ) - வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்கள்.
முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவர்கள் 20வயதுப் பிரிவு 1. ஜெ. வினோஜன் (61கிலோ) - வெள்ளிப் பதக்கம் 2. சி. மதீஷன் (57கிலோ ) 61கிலோ) - வெண்கலப் பதக்கம் 3. ஜெ. கஜந் (65கிலோ) - வெண்கலப் பதக்கம் 4. பு. ரிபிசன் (80கிலோ) - வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்கள்.
முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலய மாணவர்கள் 18 வயதுப் பிரிவில் சி. புவியரசி (57கிலோ) - வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு பாண்டியன்குளம் விநாயகபுரம் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் 16 வயதுப் பிரிவில் வி. சைன்சிகா (46கிலோ) - வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள் வடமாகாணத்தில் அதிகளவான பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |