மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள்! பிரதமர் அளித்துள்ள உறுதிமொழி
மட்டக்களப்பு(Batticaloa) கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் தெரிவில் பாரம்பரிய நடைமுறைகளும், சரியான விகிதாசார முறைமைகளும் பின்பற்றப்படாமல் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்திற்கு(E.Srinath) தெரிவித்துள்ளனர்.
நடைபெற்ற முறைகேடுகள்
இதனையடுடுத்து, இன்று(20) நாடாளுமன்றத்தில் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்து மேற்படி விடயம் தொடர்பாக தனது அதிருப்தியையும், மேற்படி விடயத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சம்பந்தமாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை கருத்திற்கொண்டு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருடன் இது சம்பந்தமாக கலந்துரையாடி ஓர் முடிவினை எடுப்பதாக பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்திற்கு உறுதிமொழியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
