வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்(Photos)
வவுனியா நகர மத்தியில் இன்று (13.05.2023) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென
தீப்பற்றி எரிந்ததுடன் அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி உயிர்
தப்பியுள்ளனர்.
ஏ9 வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த ரி.வி.எஸ் ரக மோட்டார் சைக்கிள் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மித்த பகுதியில் சென்ற போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
உயிராபத்துகள் இல்லை
அதில் பயணித்த கணவன், மனைவி, பிள்ளை ஆகியோர் உடனடியாக மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி விலகி சென்றமையால் அவர்களுக்கு எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை.
தீப்பற்றிய மோட்டார் சைக்கிளின் தீயை கடும் போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
