மூன்று நாடுகளின் பனிப்போருக்குள் இரையாகிய இலங்கை! பகிரங்க எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய பலவந்த நாடுகளின் பனிப்போருக்கு இலங்கை இரையாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், முழு நாடும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதை விட சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசாங்கத்தின் தேவையாகவுள்ளது.
அடுத்த மாதம் சீன வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தை நிறைவேற்றி அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,