சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த வருடத்தின் கடந்த மாதம் வரை 485,102 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா
இதற்கமைய கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும், இந்தியாவிலிருந்து 34,006 பேரும்,பிரித்தானியாவில் இருந்து 24,830 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை
கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
