சஜீத் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவு இருப்பதால் நாமும் ஆதரவளித்தோம்: ரிசாட் எம். பி
கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கே இருந்தது என பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மாற்றுக் கருத்து இருந்ததும் அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கு என்பதால் தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கிண்ணியாவில் இன்று (24) கட்சி பிரமுகர்களுடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இது நியாயமான வேலை அல்ல .ஜனநாயகத்தை மீறுகின்ற செயல். அது கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டது தவறை திருத்துமாறும் கண்டித்து நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆகவே ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.” என்றார்.